புதுச்சேரி முன்னாள் சபாநாயகர் படுகொலை - எஸ்.டி.பி.ஐ. கண்டனம்

புதுச்சேரி முன்னாள் சபாநாயகர் படுகொலை - எஸ்.டி.பி.ஐ. கண்டனம்

இதுகுறித்து எஸ்.டி.பி.ஐ. கட்சியின் தமிழ் மாநில பொதுச் செயலாளர் எம். நிஜாம் முகைதீன் வெளியிட்டுள்ள கண்டன அறிக்கையில் கூறியிருப்பதாவது;

புதுச்சேரி மாநிலத்தின் முன்னாள் சபாநாயகர் சிவக்குமார் இன்று காரைக்கால் நிரவியில் கூலிப்படையினரால் படுகொலை செய்யப்பட்டுள்ளார். பட்டப்பகலில் நடைபெற்ற இந்த படுகொலை பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த படுகொலையை எஸ்.டி.பி.ஐ. கட்சி வன்மையாக கண்டிக்கிறது. சிவக்குமார் அவர்களை படுகொலை செய்த கூலிப்படையினரை காவல்துறை உடனடியாக கைது செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும். அமைதி பூங்காவான காரைக்காலில் இது போன்ற
ஆயுத கலாச்சாரம் தலை தூக்குவதை காவல்துறை ஒருபோதும் அனுமதிக்க கூடாது. அதனை ஆரம்பத்திலேயே தடுத்து நிறுத்த வேண்டும். உயிரிழந்த முன்னாள் எம்.எல்.ஏ. சிவக்குமார் அவர்களின் மறைவுக்கு எஸ்.டி.பி.ஐ. கட்சியின் சார்பாக ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்து கொள்கிறேன்.   

இவ்வாறு அவர் அந்த கண்டன அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

இப்படிக்கு 

எஸ். செய்யது அகமது 
மாநில தலைமை அலுவலக செயலாளர்
எஸ்.டி.பி.ஐ. கட்சி, தமிழ்நாடு
Previous
Next Post »
0 Komentar