புதுச்சேரியில் மீன் வியாபாரம் செய்யும் பெண்கள் 116 பேர்களுக்கு பஞ்சாப் நேஷனல் வங்கி சார்பில் தலா ரூ. 25 ஆயிரம் கடனுதவி

செய்தி குறிப்பு


    புதுச்சேரியில் மீன் வியாபாரம் செய்யும் பெண்கள் 116 பேர்களுக்கு பஞ்சாப் நேஷனல் வங்கி சார்பில் தலா ரூ. 25 ஆயிரம் கடனுதவி வழங்கப்பட்டது.
     மீனவ சமுதாயத்துக்கான சிறப்பு திட்டத்தின் அடிப்படையில் பெண்களுக்கு பொருளாதார அதிகாரமளித்தல் முகாம் புதுச்சேரியில் பஞ்சாப் நேஷனல் வங்கி சார்பில் நடைபெற்றது.
     பஞ்சாப் நேஷனல் வங்கியின் சென்னை – புதுச்சேரி வட்டம் சார்பில் புதுச்சேரி ராயல்பார்க் ஓட்டலில் நடைபெற்ற இந்த முகாமிற்கு, பஞ்சாப் நேஷனல் வங்கி துணை வட்டாரத்தலைவர் சி.எம். இராமன் தலைமை வகித்தார்.
    தேசிய மீனவர் பேரவை தலைவர், முன்னாள் எம்.எல்.ஏ மா. இளங்கோ, இந்திய பெண்கள் கூட்டமைப்பின் புதுவை பிரிவு தலைவர், தொழிலதிபர் திருமதி. ராதிகா ரகு ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு மீனவ பெண்களுக்கு, கடனுதவிகளை வழங்கினார்கள். மீனவப் பெண்கள் அல்லாத பல்வேறு சிறு தொழில் முனைவோர்களான பல பெண்களுக்கும் கடனுதவி வழங்கப்பட்டது.
     பஞ்சாப் நேஷனல் வங்கி புதுச்சேரி கிளை சீனியர் மேனேஜர் என்.ஜி. அரவிந்த், துணை மேலாளர் கே. கற்பூரசுப்புராயன் உள்ளிட்ட வங்கி அலுவலர்கள், வாடிக்கையாளர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
                                              மா. இளங்கோ,
                                                 தலைவர்,
                                          தேசிய மீனவர் பேரவை.
Previous
Next Post »
0 Komentar