பாரத ரத்னா ராஜீவ்காந்தி பிறந்தநாள்

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் சார்பில் இன்று 20.08.2017 ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணிக்கு சைதாப்பேட்டை சின்னமலையில் அமைந்துள்ள ரா
ஜீவ்காந்தி அவர்களின் திருவுருவசிலைக்கு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் திரு. சு. திருநாவுக்கரசர் அவர்கள்மாலை அணிவித்தார். மேலும் 10.30 மணிக்கு சத்தியமூர்த்தி பவனில் தமிழ்நாடு காங்கிரஸ்கமிட்டியின் தலைவர் திரு. சு. திருநாவுக்கரசர் அவர்கள் ராஜீவ்காந்தி அவர்களின் திருவுருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். அதன் பின் அனைவரும் மதநல்லிணக்கஉறுதிமொழி ஏற்றனர்.

இந்நிகழ்ச்சியை தொடர்ந்து ராஜீவ்காந்தி பஞ்சாயத்தது ராஜ் சங்கதன் சார்பில்
ராஜிவ்காந்தியின் கனவு திட்டமான பஞ்சாயத்து ராஜ் சட்டம் நிறைவேறி தமிழக அரசினை உடனேஉள்ளாட்சித் தேர்தலை நடத்த வலியுறுத்தி அதன் தலைவர் திரு. செங்கம் ஜி. குமார் அவர்கள் தலைமையில் கையெழுத்து இயக்கம் ஆரம்பிக்கப்பட்டது. முதல் கையெழுத்தை தமிழ்நாடு காங்கிரஸ்
கமிட்டி தலைவர் திரு.சு. திருநாவுக்கரசர் அவர்கள் கையெழுத்திட்டு தொடங்கிவைத்தார்.

இந்நிகழ்ச்சியில் தொழில் வல்லுநர் காங்கிரஸ் பிரிவின் (Pசழகநளளழையெட ஊழபெசநளள) தென்மாநில ஒருங்கிணைப்பாளர் திருமதி கீதா ரெட்டி, தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவர் டாக்டர் குமரிஅனந்தன், திரு. எம். கிருஷ்ணசாமி, மாநில தேர்தல் அதிகாரி திரு.பாபிராஜ், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள், திரு. எஸ். பீட்டர்அல்போன்ஸ், திரு. பி. விஸ்வநாதன், திருமதி.கே.ராணி, திருமதி.டி. யசோதா, திரு. உ.பலராமன், மாநில பொதுச் செயலாளர்கள் திரு.கே. தணிகாசலம், திரு. கே. சிரஞ்சீவி, திரு. டி. செல்வம், திரு. அருள்பெத்தையா, திரு. ஆர். தாமோதரன், திரு. கீழானூர் ராஜேந்திரன், மாவட்டத் தலைவர்கள் திரு. கராத்தே தியாகராஜன், திரு. எம்.எஸ். திரவியம், திரு. வீரபாண்டியன், திரு. சிவராஜசேகரன், அணித் தலைவர்கள்; திரு. செல்வப்பெருந்தகை, திருமதி. ஜான்சிராணி மற்றும் பலர் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.மேற்கண்ட இச்செய்தியினை தங்களின்  மேலான பத்திரிகைகளில் பிரசுரித்து உதவுமாறு தங்களை அன்புடன் வேண்டுகிறோம்.

தங்கள் அன்புள்ள,

(அ.கோபண்ணா)
Previous
Next Post »
0 Komentar