இ சேவை மையங்களில் வாக்காளர் அடையாள அட்டை

திருநெல்வேலி மாவட்டத்தில் வாக்காளர் வண்ண அடையாள அட்டை வேண்டுவோர் இ-சேவை மையங்கள் மூலம் பெற்றுக் கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் மு. கருணாகரன் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
திருநெல்வேலி மாவட்டத்தில் 1.1.2017ஆம் தேதியை தகுதி நாளாகக்கொண்டு 1.9.2016 முதல் 30.09.2016 முடிய சிறப்பு சுருக்கமுறை திருத்தம் செய்யப்பட்டு வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, நீக்க விண்ணப்பங்கள் பெறப்பட்டன. இதனைத் தொடர்ந்து கடந்த 5.1.2017இல் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. இதில், கடந்த 2016 ஆம் ஆண்டு சிறப்பு சுருக்கமுறை திருத்தத்தின்போது புகைப்பட அடையாள அட்டை ஒப்பந்ததாரர்கள் மூலம் அச்சடிக்கப்பட்டு அந்தந்த வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் மூலமாக வழங்கப்பட்டது.  தற்போது புதிய வாக்காளர்களுக்கு வாக்காளர் அடையாள அட்டையை திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள இ-சேவை மையங்கள் மூலமாக இலவசமாக வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
இதன்படி, வாக்காளர் சேர்ப்பு விண்ணப்பத்தில் விண்ணப்பதாரர்கள் கொடுத்துள்ள செல்லிடப்பேசி எண்ணுக்கு ஒரு தனிப்பட்ட அடையாள எண், குறுஞ்செய்தி மூலம் அனுப்பப்படும். அந்த அடையாள எ
ண்ணை தாங்கள் பகுதிக்கு அருகிலுள்ள வட்டாட்சியர் அலுவலகங்களில் இயங்கும் இ-சேவை மையத்தில் காண்பித்து வண்ண புகைப்பட வாக்காளர் அடையாள அட்டையை இலவசமாக பெற்றுக் கொள்ளலாம்.  விண்ணப்பத்தில் செல்லிடப்பேசி எண்ணை அளிக்காத புதிய வாக்காளர்கள் தேர்தல் ஆணையத்தின் கட்டணமில்லா சேவை தொலைபேசி எண் 1950 மூலம் தொடர்புகொண்டு பதிவு செய்ய வேண்டும். அவர்களுக்கும் அடையாள எண் அனுப்பப்படும். அவர்களும் தங்களுடைய ஏதேனும் ஒரு புகைப்பட அடையாளச்சான்றை காண்பித்து இ-சேவை மையங்களில் வாக்காளர் புகைப்பட அடையாள அட்டையை இலவசமாக பெற்றுக்கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Previous
Next Post »
0 Komentar