கருணாஸ் - க்கு எஸ்.டி.பி.ஐ கட்சி கடும் கண்டனம்.

இது குறித்து எஸ்.டி.பி.ஐ கட்சியின் மாநில செயலாளர் ரெத்தினம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது,

எஸ்.டி.பி.ஐ கட்சியில் இஸ்லாமியர்கள் பெரும்பான்மையாக இருந்தாலும்  அனைத்து சமுதாய மக்களுக்காகவும், அடித்தட்டு மக்களுக்காகவும் தொடர்ச்சியாக குரல் கொடுத்து வருகிறது. ஜல்லிக்கட்டுப்பிரச்சனை, காவிரி மற்றும் முல்லை பெரியார் பிரச்சனை, மீனவர் பிரச்சனை, தமிழ் ஈழம் பிரச்சினை, கூடங்குளம் அணு உலைக்கு எதிராக போராட்டம், மீத்தேன், கெயில் விவகாரம், விவசாயிகள் பிரச்சனை, மதுவிலக்கு கோரி தொடர் போராட்டம், லஞ்ச ஊழலுக்கு எதிரான போராட்டம், உள்ளிட்ட பல்வேறு போராட்டங்களை தமிழகத்தின் வாழ்வுரிமைக்காகவும், தமிழர்களின் நலனுக்காகவும் தொடர்ச்சியாக நடத்தி வருகிறது.

மேலும் நீதி, நியாயங்களுக்கு அப்பாற்பட்டு  மத வெறியையோ,  இனவெறியையோ தூண்டுகின்ற எந்த ஒரு போராட்டத்தையும் எஸ்.டி.பி.ஐ கட்சி கையிலெடுத்ததில்லை. எந்த சமூகம் பாதிக்கப்பட்டாலும் சாதி, மதம், இனம், மொழி என பாகுபாடு பாராமல் போராடி வருகிறது.

இந்நிலையில் திருவாடனை  தொகுதி சட்டமன்ற உறுப்பினர் கருணாஸ் இன்று செய்தியாளர்கள் சந்திப்பில் பேசும் போது எஸ்.டி.பி.ஐ கட்சியை மதவாத கட்சி என குறிப்பிட்டுள்ளார். அவரது இத்தகைய பேச்சு வன்மையாக கண்டிக்கத்தக்கது. எஸ்.டி.பி.ஐ கட்சியில் என்னைப்போல் பிற சமூகத்தை சார்ந்தவர்கள் கிளை முதல் மாநில அளவில் நிர்வாகிகள், உறுப்பினர்கள் என  ஆயிரக்கணக்கானோர் செயலாற்றி வருகின்றனர்.

கருணாஸ் அவர்கள் தமக்கு எதிராக ஏற்பட்டுள்ள எதிர்ப்புகளை வேறு வகையில் கையாள வேண்டும். அதை விடுத்து எஸ்.டி.பி.ஐ கட்சியை மதவாத கட்சி என ஊடகங்களில் அவர் பேசியுள்ளார். கருணாஸ் அவர்களின் இத்தகைய பேச்சை வன்மையாக கண்டிப்பதோடு, அவர் உடனடியாக தமது பேச்சை திரும்ப பெற வேண்டும் எனவும்  இதற்காக அவர் பகிரங்கமாக மன்னிப்பு கோர வேண்டும் என அவர் தெரிவித்தார்.


இச்செய்தியை தங்களது ஊடகத்தில் வெளியிடுமாறு கேட்டுக் கொள்கிறேன்.
இப்படிக்கு


ஏ.கே. கரீம் 
மாநில ஊடக ஒருங்கிணைப்பாளர்
எஸ்.டி.பி.ஐ. கட்சி, தமிழ்நாடு
Previous
Next Post »
0 Komentar