குடியரசு தின வாழ்த்துக்கள்: ஈ ஆர் ஈஸ்வரன்



சுதந்திர காற்றை நம் இந்திய தேசத்தில் நிலவ விடவும் வருங்கால வம்சாவழியினர் வசந்தமாக வாழவும் தன்னுடைய குருதிகளையும், தேகங்களையும், வாழ்நாட்களையும், வலியுடன் கழித்தவர்களை நினைவு கூர்ந்து, எந்த நோக்கத்திற்காக நமக்கு சுதந்திரத்தை பெற்றுத் தந்தார்களோ அதை கண்ணியத்துடன் நாம் ஒவ்வொருவரும் காத்துக் கொள்ள வேண்டும். 68 – வது குடியரசு தினத்தை கொண்டாடுகின்ற நாம் முழு சுதந்திரத்தை அடைந்து விட்டோமோ என்பதையும் எண்ண வேண்டும். இன்னும் வறுமையும், பசியும், வேலையில்லா திண்டாட்டமும், விவாசாயிகள் தற்கொலையும் நிகழ்ந்து கொண்டுதான் இருக்கின்றது. இதெல்லாம் என்று முழுமையாக ஒழிகிறதோ அன்று தான் நாம் உண்மையான முழு சுதந்திரத்தை அடைவோம். நம் நாட்டுக்காக போராடிய தியாகிகளை நினைவு கூர்வோம். அனைவருக்கும் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் சார்பாக குடியரசு தின நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.
Previous
Next Post »
0 Komentar