தந்தி தொலைகாட்சிக்கு தமிழக எஸ்.டி.பி.ஐ. வாழ்த்து!


இந்திய தேர்தல் ஆணையத்தால் தேசிய விருது வழங்கப்பட்டுள்ள தந்தி தொலைகாட்சி நிர்வாகத்திற்கு எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநில தலைவர் கே.கே.எஸ்.எம்.  தெகலான் பாகவி வாழ்த்து தெரிவித்துள்ளார்.இது குறித்து அவர் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தி பின்வருமாறு:-

2016-ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலின் போது நேர்மையான முறையில் வாக்களிப்பது குறித்தும், வாக்காளர்களின் பங்கேற்பு குறித்தும் மற்றும் முக்கியமான செய்திகளை அவ்வப்போது ஒளிபரப்பி வாக்காளர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தியதற்காக இந்திய தலைமை தேர்தல் ஆணையம் டெல்லியில் ஏற்பாடு செய்திருந்த 7-வது தேசிய வாக்காளர் தின விழாவில் தந்தி தொலைகாட்சிக்கு சிறந்த தொலைகாட்சிக்கான தேசிய விருது வழங்கப்பட்டுள்ளது.

இதற்காக தந்தி தொலைகாட்சி நிர்வாக இயக்குநர் சி. பாலசுப்ரமனியனுக்கும், தந்தி தொலைகாட்சி ஆசிரியர், நிர்வாகத்தினர் மற்றும் பணியாளர் ஆகியோருக்கும் தமிழக எஸ்.டி.பி.ஐ. கட்சி சார்பில் எனது மனமார்ந்த பாராட்டுகளை தெரிவித்துக் கொள்கிறேன். தந்தி தொலைகாட்சி மேலும் பல உயரங்களை தொட எனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

Previous
Next Post »
0 Komentar