டெல்லி துணை முதல்வர் அலுவலகத்தில் கொள்ளை: முக்கிய ஆவணங்களும் திருட்டு

புதுடெல்லி:

டெல்லி துணை முதல்வர் மணிஷ் சிசோடியாவின் அலுவலகம் பத்பர்கஞ்ச் தொகுதியில் உள்ள வினோத் நகரில் உள்ளது. அங்கு நேற்று இரவு புகுந்த கொள்ளையர்கள் அலுவலகத்தை அடித்து நொறுக்கி சூறையாடினர். தடயத்தை மறைப்பதற்காக சிசிடிவி கேமராக்களை திருப்பி வைத்துள்ளனர். அத்துடன், அலுவலகத்தில் இருந்த முக்கிய ஆவணங்களும் திருடப்பட்டுள்ளன.



இன்று காலையில் பணிக்கு வந்த ஊழியர் ஒருவர், அலுவலகம் அலங்கோலமாக கிடந்ததைப் பார்த்து அதிர்ச்சி அடைந்து காவல்நிலையத்திற்கு தகவல் அளித்தார். மோப்பநாயுடன் வந்த போலீசார், கொள்ளை குறித்து விசாரணை நடத்தினர். கைரேகை நிபுணர்களும் வந்து தடயங்களை சேகரித்தனர். 

அலுவலகத்தில் இருந்த கடிதங்கள், இரண்டு கம்ப்யூட்டர்களின் சி.பி.யு. ஆகியவற்றைக் காணவில்லை என ஆளுங்கட்சியின் முக்கிய நிர்வாகி ஒருவர் கூறியிருக்கிறார்.
Previous
Next Post »
0 Komentar