அ.இ.அ.தி.மு.க. பொதுச் செயலாளர் சசிகலாவிற்கு எஸ்.டி.பி.ஐ. கட்சி வாழ்த்து

அ.இ.அ.தி.மு.க. பொதுச் செயலாளர் சசிகலாவிற்கு எஸ்.டி.பி.ஐ. கட்சி வாழ்த்து

இதுகுறித்து எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநில தலைவர் கே.கே.எஸ்.எம். தெகலான் பாகவி இன்று வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தி பின்வருமாறு;

அ.இ.அ.தி.மு.க. வின் பொதுச் செயலாளராக இன்று பொறுப்பேற்றிருக்கும் திருமதி வி.கே.சசிகலா அவர்களுக்கு எஸ்.டி.பி.ஐ. கட்சியின் சார்பாக வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

மிக முக்கியமான காலக்கட்டத்தில் அ.இ.அ.தி.மு.க வின் பொதுச் செயலாளராக திருமதி வி.கே. சசிகலா அவர்கள் பொறுப்பேற்றிருக்கிறார்கள். டெல்லியில் இருந்து கொண்டு சில வகுப்புவாத சக்திகள் அ.இ.அ.தி.மு.க.வை பலவீனப்படுத்த திட்டமிட்டு செயலாற்றிக் கொண்டிருப்பது அனைவரும் அறிந்ததே. இதன் மூலம் தமிழகத்தில் காலூன்றிட முடியும் என அவர்கள் நினைக்கிறார்கள். சூது மதியாளர்களின் சூழ்ச்சியை அ.இ.அ.தி.மு.க. பொதுச் செயலாளர் முறியடிப்பார் என நம்புகிறேன்.

மாண்புமிகு எம்.ஜி.ஆர். அவர்கள் அ.இ.அ.தி.மு.க.வை மாபெரும் சக்தியாக உருவாக்கினார். அவரது வழியில்  மறைந்த முதல்வர் மாண்புமிகு ஜெயலலிதா அவர்கள் கட்சியை மேலும் வலிமைப்படுத்தினார். அதை பின்தொடர்ந்து கட்சியை பாதுகாத்திடவும், மேலும் வலிமைப்படுத்தி சிறப்பாக செயல்படவும்  திருமதி வி.கே.சசிகலா அவர்களை வாழ்த்துகிறேன்.

இவ்வாறு அவர் அந்த வாழ்த்துச் செய்தியில் கூறியுள்ளார்.

இப்படிக்கு
எஸ்.செய்யது அகமது
மாநில தலைமை அலுவலக செயலாளர்
எஸ்.டி.பி.ஐ. கட்சி, தமிழ்நாடு
Previous
Next Post »
0 Komentar