நாட்டின் மதச்சார்பின்மையை பாதுகாக்க உறுதி மேற்கொள்வோம்! எஸ்.டி.பி.ஐ. கட்சி மாநில தலைவரின் குடியரசு தின வாழ்த்துச் செய்தி!

இது குறித்து எஸ்.டி.பி.ஐ. கட்சி மாநில தலைவர் கே.கே.எஸ்.எம். தெகலான் பாகவி இன்று வெளியிட்டுள்ள குடியரசு தின வாழ்த்துச் செய்தியில் கூறியிருப்பதாவது:-

நாட்டு மக்கள் அனைவருக்கும் குடியரசு தின வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறேன்.

நாட்டின் 68-வது குடியரசு தின விழாவை கொண்டாடி வரும் இவ்வேளையில் நமது நாட்டின் அரசியல் சாசன சட்டம் வலியுறுத்தும் மதச்சார்பின்மை, ஜனநாயகம் ஆகியவற்றை வலுப்படுத்த வேண்டிய தேவையும், அவசியமும் இப்போது ஏற்பட்டுள்ளது. எனவே இவற்றை வலிமைப்படுத்த நாம் உறுதியேற்போம்.

இந்நாட்டின் வளங்கள் அனைவருக்கும் சமமாக கிடைக்கவும், சமூக நீதி தளைக்கவும் ஜாதி, மதங்களுக்கு அப்பாற்பட்டு நாம் பாடுபட வேண்டும். இவ்வாறு அதில் அவர் தெரிவித்தார்.

இச்செய்தியை தங்களது ஊடகத்தில் வெளியிடுமாறு கேட்டுக் கொள்கிறேன்.

இப்படிக்கு

ஏ.கே. கறீம்
மாநில ஊடக ஒருங்கிணைப்பாளர்
எஸ்.டி.பி.ஐ. கட்சி, தமிழ்நாடு
Previous
Next Post »
0 Komentar